×

அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

சென்னை: அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார். கோவை தொகுதிக்கு உட்பட்ட காமாட்சிபுரத்தில் தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து 4-வது நாளாக விதிமீறலில் ஈடுபட்ட அண்ணாமலையை போலீசார் நேற்று தடுத்து நிறுத்தினர். இரவு 10 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post அண்ணாமலை மீதான விதிமீறல் புகார் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி உறுதி appeared first on Dinakaran.

Tags : Chief Electoral Officer ,Annamalai ,CHENNAI ,Kamachipuram ,Coimbatore ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...